Posts

Showing posts from December, 2021

The Sick Lion

Image
ஒரு காட்டில் ஒரு வயதான சிங்கம் வாழ்ந்து வந்தது, அது எந்த உழைப்பும் இல்லாமல் தனது உணவை பெற ஒரு யோசனை செய்தது.  அந்த சிங்கம் தனக்கு நோய் உள்ளது என காட்டினுள் ஒரு பொயியான தகவலை பரப்பி, அதன் குகையில் நோயுற்றதை போல் படுத்தும் கொண்டது.  அந்த காட்டில் வாழ்ந்த அனைத்து விலங்குகளும்  தங்கள் அரசன் நோயுற்று இருப்பதை அறிந்து அவரது நலம் விரும்பி  சந்திக்க முடிவு செய்தன.  சிங்கத்தின் குகை வாயிலில், எல்லா விலங்குகளும் ஒன்றின் பின் ஒன்றாக அரசரை சந்திக்க முடிவு செய்தன. அப்போது முதலில் ஒரு பசு குகைக்குள் சென்றது. மற்ற விலங்குகள் அனைத்தும் தங்கள்  முறைக்காக வெளியில் காத்து நின்றன.   வெகு நேரமாகியும் பசு வெளியே வராத்தால், பன்றி உள்ளே சென்றது . பின்னர் முயலும் பில்லியும் குகைக்குள் சென்றனர்.  இறுதில் குள்ளநரி மட்டும் காத்திருந்து விட்டு, உள்ளே நுழையத் தயங்கியது. சிங்க ராஜா  குள்ளநரியை, "ஏன் நரியாரே ? என்னைப் பார்க்க வரமாட்டீரா ? " என அழைத்தது. அதற்கு குள்ளநரி, " அரசே, என் நண்பர்கள் இன்னும் வரவில்லை. அவர்கள் உங்கள் வயிற்றிற்குள் சென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன் " ...

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்... பதினெண்கீழ்கணக்கு நூல்கள்: நாலடியார்        -  சமண முனிவர் நான்மணிக்கடிகை  -  விளம்பி நகானார் இன்னா நாற்பது  -  கபிலர் இனியவை நாற்பது    -  பூதச்சேந்தனார் கார் நாற்பது  -  மதுரை கண்ணங் கூத்தனார்         களவழி நாற்பது  -  பொய்கையார் ஐந்திணை ஐம்பது  -  மாறன் பொறையனார் ஐந்திணை எழுபது  -மூவாதியார் திணை மொழி ஐம்பது  -  கண்ணன் சேந்தனார் திணை மாலை நூற்றைம்பது  -  கணிமேதாவியார் திருக்குறள்  -  திருவள்ளுவர் திரிக்கடுகம்  -  நல்லாதனார் ஆசரக்கோவை  -  பெருவாயின் முள்ளியார் பழமொழி  -  முன்றுரை அரையனார் சிறுபஞ்சமூலம்  -  காரியாசன்  கைந்நிலை  - புல்லங்காடனார் முதுமொழிக்காஞ்சி  -  மதுரை கூடலூர் கிழார் ஏலாதி  -  கணிமேதாவியார் மேற்கூறிய பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...     ...

உணவு நூல்

Image
            உணவு நூல் எனும் இந்நூலை எழுதியவர் திரு ம. செந்தமிழன். செம்மை நலம் எனும் நலக்கொள்கை, ஆக்கை, மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளுக்கும் ஐம்பூதங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படை கொண்டது. அம்மையப்பர் படைப்பின் பண்புகளை விரித்துரைக்கும் இயல்பு கொண்டது. இக்கொள்கையினை விளக்கும் நூல் வரிசையில் இஃது முதல் நூல் ! எனும் கருத்தினை கொண்டு திரு ம.செந்தமிழன் அவர்கள் இந்த புத்தகத்தை தொடர்கிறார்.