மனதில் உறுதி வேண்டும் !....

 


மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

 கனவு மெய்ப்பட வேண்டும்,

 கைவசமாவது விரைவில் வேண்டும்;

 தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

 கண் திறந்திட வேண்டும்,

 காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்;

 உண்மை நின்றிட வேண்டும்.

 ஓம் ஓம் ஓம் ஓம்

-மகாகவி பாரதியார்


Comments