தாலாட்டு பாடல்

 



ஆராரோ ஆரிரரோ

 ஆறு ரண்டும் காவேரி,

 காவேரி கரையிலையும்

 காசி பதம் பெற்றவனே !

 கண்ணே நீ கண்ணுறங்கு !

 கண்மணியே நீ உறங்கு !

 பச்சை இலுப்பை வெட்டி,

பவளக்கால் தொட்டிலிட்டு,

 பவளக்கால் தொட்டிலிலே,

 பாலகனே நீ உறங்கு !

 நான்னாட்ட நீ தூங்கு !

நாகமரம் தேரோட !

 தேரு திரும்பி வர !

தேவ ரெல்லாம் கை யெடுக்க !

 வண்டி திரும்பி வர !

 வந்த பெண்கள் பந்தாட !

 வாழப் பழ மேனி !

 வைகாசி மாங்கனியே !

 கொய்யாப் பழ மேனி ! - நான் பெத்த

 கொஞ்சி வரும் ரஞ்சிதமே !

வாசலிலே வன்னிமரம் !

வம்மிசமாம் செட்டி கொலம் !

 செட்டி கொலம் பெத்தெடுத்த !

 சீராளா நீ தூங்கு !

 சித்திரப் பூ தொட்டிலிலே !

 சீராளா நீ தூங்கு !

கொறத்தி கொறமாட !

கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல !

 வேதஞ் சொல்லி வெளியே வர !

வெயிலேறி போகுதையா !

 மாசி பொறக்கு மடா !

 மாமன் குடி யீடேற !

தையி பொறக்கு மடா - உங்க !

 தகப்பன் குடி யீடேற !

ஆராரோ ஆரிராரோ

 கண்ணே நீ கண்ணுறங்கு !


Comments