Skip to main content
தாலாட்டு பாடல்
ஆனை விற்கும் வர்த்தகராம் - உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே - உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே - உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ !
பொன்னால் எழுத்தாணியும் - கண்ணே உனக்கு
மின்னோலைப் புத்தகமும்
கண்ணாரே ! பின்னா ரேன்னு - கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !
Comments
Post a Comment