குழந்தை பாடல்

 


தாத்தா வைத்த தென்னையுமே,

தலையால் இளநீர் தருகிறது !

பாட்டி வைத்த கொய்யாவும்,

பழங்கள் நிறைய கொடுக்கிறது !

அப்பா வைத்த மாஞ்செடியும்,

அல்வா போல பழம் தருது !

அம்மா வைத்த முறையுமே

அளவில்லாமல் காய்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையும்,

கிண்ணம் போல பழுக்கிறது !

சின்னஞ்சிறுவன் நானுமொரு

செடியை நட்டு வளர்த்பேனே...


Comments