சின்னஞ் சிறு கிளியே !

 


சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !

செல்வ களஞ்சியமே !

என்னைக் கலி தீர்த்தே - உலகில்

ஏற்றம் புரிய வந்தாய் !


பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !

பேசும்பொற் சித்திரமே !

அள்ளி யணைத்திடவே - என் முன்னே

 ஆடி வருந் தேனே !


ஓடி வருகையிலே -  கண்ணம்மா !

உள்ளம் குளிரு தடி !

அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்

ஆவி தழுவு தடி !


 உச்சி தனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளரு தடி !

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்

மேனி சிலிர்க்கு தடி !


கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்

 கள்வெறி கொள்ளு தடி !

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !

உன்மத்த மகுதடி !


சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது

சஞ்சல மாகு தடி !

நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடி !


 உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில் 

உதிரம் கொட்டு தடி !

எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !

என்னுயிர் நின்ன தன்றோ ?


சொல்லும் மழையிலே - கண்ணம்மா 

துன்பங்கள் தீர்த்திடு வாய் 

முல்லைச் சிரிப்பாலே - எனது 

மூர்க்கந் தவிர்த்திடு வாய்,


 இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல் 

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே - உனைநேர் 

ஆகுமோர் தெய்வ முண்டோ ?


மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் 

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் 

செல்வம் பிறிது முண்டோ ?

- மகாகவி பாரதியார்

Comments